உள்ளூர் செய்திகள்
கூடங்குளத்தில் அணுமின் நிலைய ஊழியர் தற்கொலை
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஒப்பந்த பணியில் ஈடுபட்டிருந்த ஒரிசா மாநிலை ஊழியர் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:
ஒரிசா மாநிலத்தை சேர்ந்தவர் ஜனாரத்னபிஜோ (வயது41). இவர் கூடங்குளத்தில் தங்கி இருந்து அணுமின் நிலைய காண்டிராக்ட் பணியில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று அவர் தங்கி இருந்த அறை நீண்ட நேரம் திறக்காததால் அருகில் உள்ளவர்கள் சென்று பார்த்தனர். அப்போது ஜனாரத்னபிஜோ அந்த அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்தபடி பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்து உள்ளனர்.
ஒரிசா மாநிலத்தை சேர்ந்தவர் ஜனாரத்னபிஜோ (வயது41). இவர் கூடங்குளத்தில் தங்கி இருந்து அணுமின் நிலைய காண்டிராக்ட் பணியில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று அவர் தங்கி இருந்த அறை நீண்ட நேரம் திறக்காததால் அருகில் உள்ளவர்கள் சென்று பார்த்தனர். அப்போது ஜனாரத்னபிஜோ அந்த அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்தபடி பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்து உள்ளனர்.