உள்ளூர் செய்திகள்
கீழ்பென்னாத்தூரில் மஞ்சப்பை - திட்டத்தினை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார்.

மீண்டும் மஞ்சப்பை திட்டம் அறிமுகம்

Published On 2022-01-26 14:27 IST   |   Update On 2022-01-26 14:27:00 IST
கீழ்பென்னாத்தூர் பகுதியில் மீண்டும் மஞ்சப்பை திட்டம் அறிமுகம் செய்யும் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
கீழ்பென்னாத்தூர்:

கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் மீண்டும் மஞ்சப்பை பயன்பாட்டை கொண்டுவரும் வகையில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. 

தமிழகத்தில் பிளாஸ்டிக் பை பயன்பாடுகளை ஒழிக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு வகைகளில் நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது. 

அதன் அடிப்படையில், கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்கும் வகையிலும், கைபைகளை உபயோகப்படுத்திடும் வகையிலும் விழிப்புணர்வு கூட்டம் ஒன்றிய அலுவலக மன்ற கூடத்தில் நடந்தது. ஒன்றியக்குழு தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார். 

மாவட்ட கவுன்சிலர் ஆராஞ்சி ஆறுமுகம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், அனுராதா சுகுமார் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பத் அனைவரையும் வரவேற்றார். 

துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்துகொண்டு, பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை ஒழிப்பது குறித்தும், துணிப்பைகளை பயன்படுத்துவது குறித்தும் கருத்துரைகளும் ஆலோசனைகளும் வழங்கினார். 

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கொண்டு வந்த மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் கீழ், கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்களிடம் மஞ்சப்பைகளை வழங்கினார். கிராமபுற மக்கள் துணிப்பை எனும் மஞ்சப்பைகளை பயன்படுத்திட வேண்டும் எனவும் அறிவுரை கூறினார். 

Similar News