உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

வேலூரில் இன்று 164 பேருக்கு கொரோனா

Published On 2022-01-25 09:32 GMT   |   Update On 2022-01-25 09:32 GMT
வேலூர் மாவட்டத்தில் இன்று 164 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 55,800 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

52,800 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 1,158 பேர் பலியானார்கள். தற்போது 1,842 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று 164 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் வெளிமாநிலத்தவர் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் உள்ளனர். வேலூர் மாநகராட்சி பகுதியில் மட்டும் 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் நேற்று 278 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்திற்கு மேற்பட்டோர் வீடுகளிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர். 

வேலூர் மாவட்டத்தில் புறநகர் மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் தொற்று பரவல் குறைந்துள்ளது. தற்போது குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 

மாவட்டத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 96 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News