உள்ளூர் செய்திகள்
சங்கரன்கோவிலில் மோட்டார் சைக்கிள் திருட்டு- சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை
சங்கரன்கோவில் பாரதியார் நகரில் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற மர்ம நபரை சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் பாரதியார் நகரை சேர்ந்தவர் திருமலைக்குமார்(வயது 40). விவசாயி.
இவர் சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் தனது வீட்டு வாசலில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.
மறுநாள் காலை பார்த்தபோது வீட்டு வாசலில் அவரது மோட்டார் சைக்கிள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசில் அவர் புகார் அளித்தார்.
போலீசார் அவரது வீட்டின் அருகில் உள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.