உள்ளூர் செய்திகள்
செல்போன் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்ற தொழிலாளியை போலீசார் மீட்டு விசாரணை நடத்திய காட்சி.

செல்போன் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி

Published On 2022-01-24 10:05 GMT   |   Update On 2022-01-24 10:05 GMT
கண்ணமங்கலத்தில் செல்போன் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்ற தொழிலாளியை போலீசார் மீட்டனர்.
கண்ணமங்கலம்:-

கண்ணமங்கலம் பகுதியில் உள்ள ஏரியில் பொதுப்பணித்துறை சார்பில் மீன் பிடிக்க மீனவர்களின் சங்கத்தினருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏலம் விடப்பட்டது. 

இந்த நிலையில் கண்ணமங்கலம் ஏரியில் பொதுமக்கள் மீன் பிடிப்பதை தடை செய்யவேண்டும் என இன்று காலை கண்ணமங்கலம் செம்படவர் தெருவை சேர்ந்த ரமேஷ் (வயது48). தொழிலாளி. 

அப்பகுதியில் உள்ள செல்போன் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்றார். 

இதுகுறித்து தகவலறிந்த கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். 

மேலும் ஆரணியிலிருந்து தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து ரமேஷை மீட்டனர். கண்ணமங்கலம் போலீசார் ரமேஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனால் கண்ணமங்கலம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News