உள்ளூர் செய்திகள்
வரதராஜ பெருமாள் கோவிலில் கோ பூஜை
இஞ்சிமேடு கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோவிலில் கோ பூஜை நடைபெற்றது.
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அருகே உள்ள இஞ்சிமேடு வரதராஜ பெருமாள் கோவிலில் கோ-பூஜை விழா நடந்தது.
பெருந்தேவி தாயார் வரதராஜ பெருமாள், கல்யாண லட்சுமி நரசிம்மர், ராமர், லட்சுமணர், சீதாதேவி, சக்கரத்தாழ்வார், ஆண்டாள் நாச்சியார் ஆகிய சுவாமிகளுக்கு ஸ்ரீரங்க சடகோப கைங்கர்ய சபா நிர்வாகி பாலாஜி பட்டர் வேங்கட நாதன் ஆகியோர் ஸ்தாபன திருமஞ்சனம் செய்து வைத்தனர்.
பின்னர் 40 பசுக்களை குங்குமம். மஞ்சள். பட்டுப்புடவை. பட்டு வேஷ்டி ஆகியவை பசுக்களுக்கு சாத்துபடி செய்து கற்பூர ஆராதனை மற்றும் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது.
இதில் குழந்தை பாக்கியம் திருமணதடை, பிறந்தநாள், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைப்பது மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வைத்து வணங்கிச் சென்றனர்.
காலையில் இருந்து பக்தர்கள் வந்த வண்ணமாய் இருந்தனர். இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திண்டிவனம், வந்தவாசி, போளூர், ஆரணி, சேத்துப்பட்டு, செஞ்சி ஆகிய ஊர்களிலிருந்து கார் மூலமாக வந்து இந்த கோ- பூஜையில் கலந்துகொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.