உள்ளூர் செய்திகள்
ஆரணியை புதிய மாவட்டம் உருவாக்க கோரி வியாபாரிகள் உள்ளிட்ட சங்கங்கள் ஆலோசனை நடத்திய காட்சி.

ஆரணி தலைமையில் புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும்

Published On 2022-01-23 08:44 GMT   |   Update On 2022-01-23 08:44 GMT
ஆரணி தலைமையில் புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என 25 சங்கங்கள் ஒன்றிணைந்து முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆரணி:

 22 ஆண்டுகளுக்கு முன்பு வடஆற்காடு மாவட்டத்திலிருந்து திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்டமாக தோற்றுவிக்கபட்டு அப்போது 6 வட்டங்கள் 2 வருவாய் கோட்டங்கள் உள்ளிடக்கி இருந்தன.

திருவண்ணாமலை, ஆரணி, வந்தவாசி, செய்யார், போளுர், கலசபாக்கம், கீழ்பென்னாத்தூர், செங்கம் என 8 தொகுதிகள் உள்ளிடக்கியும் தற்போது திருவண்ணாமலை ஆரணி செய்யார் என 3 வருவாய் கோட்டங்கள் 4நகராட்சி 18 ஊராட்சி ஓன்றியகள் 10 பேரூராட்சி 860 கிராம ஊராட்சி பெற்றுள்ளன இதன் பரப்பளவு சுமார் 188 கி.மீட்டர் ஆகும்.

தற்போது தமிழகத்தில் பெரிய மாவட்டமாக திருவண்ணாமலை மாவட்டம்  உள்ளது.
 
திருவண்ணாமலை மாவட்டத்தை 2-ஆக பிரித்து ஆரணியை தலையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று கடந்த கடந்த 10 ஆண்டுகளாக ஆரணி பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளன.

ஆரணி பொருளாதாரம் தொழில் மற்றும் அடிப்படை நிர்வாக தேவைகள் அனைத்தும் கொண்டிருக்கின்றன பாராளுமன்ற தொகுதியாகவும் உள்ளது.

ஆரணி பட்டு என்றாலே உலகளவில் பிரசித்த பெற்றவையாகவும் விளங்கி வருகின்றன. 300-க்கும் மேற்பட்ட அரிசி உற்பத்தி ஆலைகள் இயங்கி வருகின்றன. 

மாவட்டமாக அனைத்து தகுதிகளையும் பெற்ற ஆரணியை மாவட்டமாக பிரிக்க வேண்டும் என்று பலதரப்பு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

இது மட்டுமின்றி கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆரணியை தலையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்கபடும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தார்.

மேலும் கடந்த 2 நாட்களாக சமூக வளைதலங்களான வாட்ஸ்-அப் பேஸ்-புக் ஆகியவ்றறில் ஆரணியை தலையிடமாக கொண்டு புதிய மாவட்ட உருவாக்க வேண்டும் என்று இளைஞர்கள் சமூக ஆர்வலர்கள் வியாபாரிகள் வைரலாக பரப்பி வருகின்றனர்.

இந்நிலையில் சமூக வளைதலங்களில் வைரலாக பரவியதன் மூலம் வியாபாரிகள் இளைஞர்கள் மாணவர்கள் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் ஓன்றுணைந்து ஆரணியை தலையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க ஓருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம் ஆரணி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. 

இதில் 25-க்கும் மேற்பட்ட சங்கங்களை சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்டோர் ஓன்றுணைந்து ஆரணியை தலையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் மாவட்ட அமைச்சரானன பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோருக்கு கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

ஆரணி மக்களின் கோரிக்கை நிறைவேற்ற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Tags:    

Similar News