உள்ளூர் செய்திகள்
கூட்டத்தில் நிவேதாமுருகன் எம்.எல்.ஏ. பேசினார். அருகில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.

அரசின் திட்டபணிகள் தி.மு.க. வேட்பாளர்களின் வெற்றிக்கு உதவும்

Published On 2022-01-22 09:26 GMT   |   Update On 2022-01-22 09:26 GMT
அரசின் திட்டபணிகள் தி.மு.க. வேட்பாளர்களின் வெற்றிக்கு உதவும் என்று நிவேதா முருகன் எம்.எல்.ஏ. பேசினார்.
சீர்காழி:

சீர்காழி நகர பூத்கமிட்டி உறுப்பினர்கள் கூட்டம் நகர செயலாளர் ம.சுப்பராயன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் 
ஜி.என்.ரவி, மாவட்ட பொறியாளர் அணி செயலாளர் ஆர்.கலைவாணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அலெக்டாண்டர், மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் பிரபாகரன், டாக்டர்.பன்னீர்செல்வம், நகர துணை 
செயலாளர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தலைமை செயற்குழு உறுப்பினரும், சீர்காழி எம்.எல்.ஏ.வுமான எம்.பன்னீர்செல்வம் பங்கேற்று பேசுகையில், சீர்காழி நகராட்சி 
24 வார்டுகளிலும் கட்சி தலைமை முடிவு எடுத்து அறிவிக்கும் 
வேட்பாளருக்கு போட்டியாக தி.மு.கவை சேர்ந்தவர்கள் 
சுயேட்சையாகவோ வேறு எந்தவகையிலும் கட்சி வேட்பாளர் 
வெற்றிக்கு எதிராக செயல்படக்கூடாது. 

போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு அடுத்து வரவுள்ள கூட்டுறவு 
சங்க பொறுப்புகள் வழங்கிட பரிசீலிக்கப்படும் என்றார்.

மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க பொறுப்பாளரும், பூம்புகார் 
எம்.எல்.ஏ.வுமான நிவேதா முருகன் பேசுகையில், சீர்காழி நகராட்சியில் 
உள்ள 24 வார்டுகளிலும் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர்களின் 
வெற்றிக்கு பாகுபாடின்றி கட்சியினர் ஒன்றிணைந்து களபணியாற்றி 
வெற்றி பெறசெய்யவேண்டும். 

அரசின் திட்டபணிகள் தி.மு.க வேட்பாளர்களின் வெற்றிக்கு உதவும் என்றார். 

இதில் கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட துணை 
அமைப்பாளர் செல்வமுத்துக்குமார், முன்னாள் நகர செயலாளர் 
பொன்முடி, பொருளாளர் பந்தல் முத்து, முன்னாள் பொருளாளர் துரை, 
திட்டை ஊராட்சிமன்ற தலைவர் பெரியசாமி, நிர்வாகிகள் திருச்செல்வம், ஆனந்த், சரவணன், இளைஞரணி நிர்வாகி தனராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News