உள்ளூர் செய்திகள்
கடும்பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டு சென்றனர்.

கடும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி

Published On 2022-01-22 09:19 GMT   |   Update On 2022-01-22 09:19 GMT
திருவண்ணாமலையில் கடும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதிகுள்ளாகி வருகின்றனர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலையில் கடந்த மார்கழி மாதம் முதல் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. இந்த பனியின் காரணமாக மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அத்தியந்தல், அடி அண்ணாமலை உள்ளிட்ட கிராம மக்கள் முதலில் அதிகம் பாதிக்கப்பட்டு வந்தனர்.

 அதன் பின்னர் திருவண்ணாமலை நகர பகுதி மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பனிப்பொழிவால் ஏற்படும் நோய்களுக்கு மக்கள் சிகிச்சை பெற மருத்துவமனைகளில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து வருகின்றனர். 

இந்த நிலையில் திருவண்ணாமலையில் இன்று காலை கடும் பனி மூட்டம் ஏற்பட்டது. இதன் காரணமாக காலை 6 மணி முதல் 8 மணிவரை சாலைகளை பனிமூட்டம் மறைத்தது. எதிரே வரும் வாகனங்களை பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

 இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர். காலை 8 மணிக்கு பின்னரே பனிமூட்டம் விலகியது.அதன்பின்னர் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வழக்கம் போல் சென்றனர்.

பனிப்பொழிவு அதிகமாக உள்ளதால் காலை நேரங்களில் நடைபயிற்சி செல்பவர்கள் குல்லா உள்ளிட்ட பாதுகாப்பு ஆடைகளை அணிந்து கொண்டு செல்கின்றனர். டீக்கடைகளில் மக்கள் அதிகளவில் குவிகின்றனர்.

திருவண்ணாமலையில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் பனிப்பொழிவும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப விடாமல் செய்து வருகிறது.
Tags:    

Similar News