உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

வங்கி ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா

Published On 2022-01-22 09:12 GMT   |   Update On 2022-01-22 09:12 GMT
ஆரணியில் வங்கி ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் 4 நாட்கள் வங்கி மூடப்படும் என தெறிவித்துள்ளனர்.
ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த தச்சூர் சாலையில் இந்தியன் வங்கி இயங்கி வருகின்றன.

இதில் மேலாளர் தியாகராஜன் உட்பட 13 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

மேலும் இதில் வங்கி ஊழியர்கள் 2 பேருக்கு உடல் நலம் பாதிக்கபட்டதால் எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

இதில் பெண் ஊழியர் உட்பட 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து வங்கியில் பணிபுரிந்த மற்ற ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யபட்டன.

மேலும் கொரோனாவால் பாதிக்கபட்டவர்கள் தங்களின் வீட்டிலேயே தனிமைபடுத்தி கொள்ள வேண்டும் என்றும் 4 நாட்கள் வங்கி இயங்கக்கூடாது என்று மருத்துவ துறையினர் அறிவுறுத்தியதால் வங்கி இழுத்து மூடப்பட்டன.
Tags:    

Similar News