உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

மாடு விடும் விழாவில் காளை முட்டி படுகாயமடைந்த சிறுமி பலி

Published On 2022-01-21 09:43 GMT   |   Update On 2022-01-21 09:43 GMT
லத்தேரி அருகே மாடு விடும் விழாவில் காளை முட்டி படுகாயமடைந்த சிறுமி பலியானார்.
வேலூர்:

வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே உள்ள பனமடங்கி கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 15-ந்தேதி எருது விடும் விழா நடந்தது. 

இந்த போட்டியில் 264 காளைகள் பங்கேற்றன. வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்ட காளைகள் சீறிப் பாய்ந்து சென்றன.

வேலூர் அருகே உள்ள பொய்கை கிராமத்தைச் சேர்ந்த நரேஷ் என்பவரது மகள் வினோதினி (வயது13) என்பவர் மாடு விடும் விழா நடந்துகொண்டிருந்த போது அங்குள்ள தெருவின் முனையில் நின்று கொண்டிருந்தார்.

அவிழ்த்து விடப்பட்ட காளை ஒன்று சீறிப்பாய்ந்து ஓடியது. அது வினோதினியை முட்டி தூக்கி வீசியது. இதில் சிறுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுமி வினோதினி இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

இதுவரை வேலூர் மாவட்டத்தில் நடந்த மாடு விழாவில் மாடு முட்டி 3 பேர் பலியாகி உள்ளனர்.
Tags:    

Similar News