உள்ளூர் செய்திகள்
ஓச்சேரி அருகே சிறுமிக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி அடுத்த ஆயர்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் இவரது மகள் தனுஸ்ரீ ( வயது 7). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தனுஸ்ரீ காய்ச்சலால் அவதிபட்டார். காய்ச்சல் குறையாததால் வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக வேலூர் சி.எம்.சி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார் அவருக்கு அங்கு பரிசோதனை செய்ததில் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து துப்புரவு பணியாளர்கள் அந்த கிராமத்தில் வீடு, வீடாக சென்று டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை அப்புறப்படுத்தி தூய்மை செய்து கொசுப்புழுக்களை அழிக்க கிருமி நாசினி தெளித்தனர்.