உள்ளூர் செய்திகள்
குப்பைகளில் பற்றிய தீயால் புகை மூட்டம்
சேலம் அருகே குப்பைகளில் பற்றிய தீயால் புகை மூட்டம் கிளம்பியது.
சேலம்:
சேலம் இரும்பாலை மெயின் ரோடு கணபதி பாளையம் அருகே சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இன்று இந்த குப்பைகளில் திடீர் என்று தீ பிடித்தது.
இதனால் தீ பற்றி எரிந்து புகை மூட்டம் உண்டானது. இதன் காரணமாக அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். அந்த பகுதியில் வசிக்கும் மக்களும் அவதிப்பட்டார்கள்.
சாலை ஓரமாக குப்பைகளை கொட்ட தடை விதிக்க வேண்டும். அவ்வாறு கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அத பகுதி மக்கள் கூறினர்.