உள்ளூர் செய்திகள்
கொரோனா பரவலால் 2 தெருக்கள் அடைப்பு
காட்பாடியில் கொரோனா பரவல் காரணமாக 2 தெருக்கள் இரும்பு தகடுகளால் அடைக்கப்பட்டுள்ளது.
வேலூர்:
காட்பாடி பகுதியில் தொடர்ந்து கொரோனாபரவி வருகிறது. காட்பாடி காந்தி நகர் 10-வது குறுக்கு தெரு மற்றும் 22-வது கிழக்கு தெரு ஆகிய இடங்களில் தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று ஒரே நாளில் இந்த 2 தெருக்களிலும் 10-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் 10-வது குறுக்கு தெரு மற்றும் 22-வது கிழக்குதெரு ஆகியவற்றை மாநகராட்சி அதிகாரிகள் இரும்பு தகடுகள் கொண்டு அடைத்தனர்.
தெருவில் உள்ள பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம்.அவர்களுக்கு தேவையான பொருட்களை மாநகராட்சி ஊழியர்கள் மூலம் வாங்கிக்கொடுக்க ஏற்பாடு செய்துள்ளனர்.