உள்ளூர் செய்திகள்
கடன் பிரச்சினையால் விவசாயி தற்கொலை
ஜெயங்கொண்டம் அருகே கடன் பிரச்சினை காரணமாக விவசாயி தற்கொலை செய்துகொண்டார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கூவத்தூர் குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாகரன் (வயது 41). அவருக்கு செந்தமிழ்ச்செல்வி (40) என்ற மனைவியும், சந்துரு என்ற மகனும், தருமி என்ற மகளும் உள்ளனர்.
இந்தநிலையில் கருணாகரன் தனது வீட்டில்இருந்து சிறிது தூரம் தள்ளி முந்திரி தோப்பில் மா மரத்தில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
அந்த வழியாக கல்நடைகளை மேய்க்க சென்றவர்கள் பார்த்து அவர் வீட்டிற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவல் அறிந்த உறவினர்கள் சென்று கருணாகரனின் உடலை மீட்டு வீட்டிற்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் சென்று உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து அவர் எப்படி இறந்தார் என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.