உள்ளூர் செய்திகள்
செய்யாறு அருகே பைக் விபத்தில் விவசாயி பரிதாபமாக இறந்தார்.
செய்யாறு:
செய்யாறு அடுத்த மேல் நகரம் பேடு கிராமத்தை சேர்ந்தவர் ரகு (வயது 37), விவசாயி. இவருக்கு சித்ரா என்ற மனைவியும் லோகேஷ், ஆகாஷ் என்ற 2 மகன்கள் உள்ளனர்.
இவர் கடந்த 13-ந்தேதி பொங்கல் பொருட்கள் வாங்குவதற்காக செய்யாறுக்கு தனது பைக்கில் வந்தார். பாராசூர் கூட்ரோடு அருகே வந்தபோது திடீரென்று மாடு குறுக்கே வந்ததால் மாட்டின் மீது மோதாமல் இருக்க பிரேக் போட்டார்.
இதில் நிலைதடுமாறி ரோட்டில் விழுந்த ரகு பலத்த காயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து செய்யாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு விசாரணை நடத்தி வருகிறார்.