உள்ளூர் செய்திகள்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 349 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை:
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 349 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராணிப் பேட்டை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50,185 பேர்.
இதுவரை மாவட்டத்தில் 47,383 பேர் குணமடைந்து வீடு களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அரசு மருத்துவமனையில் 39 பேரும் தனியார் மருத்துவமனையில் 56 பேரும் உள்ளனர். வீட்டு தனிமையில் 1,926 பேர் உள்ளனர்.