உள்ளூர் செய்திகள்
உத்தமராய பெருமாள் கோவில்.

மகர உற்சவ விழாவிற்கு தடை

Published On 2022-01-18 09:17 GMT   |   Update On 2022-01-18 09:17 GMT
கண்ணமங்கலம் அருகே உள்ள உத்தமராய பெருமாள் கோவிலில் மகர உற்சவ விழாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அருகே அய்யம்பாளையம் கிராமத்தில் உள்ள மலைமீது ஊமைக்கு வாய் கொடுத்த உத்தமராய பெருமாள் கோவிலில் ஆண்டு தோறும் தைமாதம் 4-ந் தேதி (நேற்று 17-ந் தேதி) மகர உற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த திருவிழாவுக்கு ஏராளமான பக்தர்கள் வருகைதந்து சாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில் கொரனோ கோவில்களில் வழிபாடு செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. 

இதனால் நேற்று அதிகாலை கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றபின் கோவில் மூடப்பட்டது. ஆனாலும் பக்தர்கள் குடும்பம் குடும்பமாய் வருகைதந்து பூட்டப்பட்ட கோவில் கிரில் கேட்டில் துளசி மற்றும் மலர் மாலைகள் சாத்தி, கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து, கோவிந்தா!கோவிந்தா!என பக்தி பரவசத்துடன் வழிபாடு செய்தனர். 

இவ்விழாவிற்காக வியாபாரிகள் நடைபாதைக்கடைகள் வைத்திருந்தனர்.
Tags:    

Similar News