உள்ளூர் செய்திகள்
கைது

செஞ்சி அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

Published On 2022-01-17 11:34 GMT   |   Update On 2022-01-17 11:34 GMT
செஞ்சி அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செஞ்சி:

செஞ்சி அருகே பாலப்பாடியில் நல்லான்பிள்ளைபெற்றாள் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவுரிசங்கர் மற்றும் போலீசார் ரோந்துப்பணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள டாஸ்மாக் கடையின் பின்புறம் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்ததாக செம்மேடு அண்ணா நகரை சேர்ந்த மாணிக்கம்(வயது 54), கிருஷ்ணன்(65), வரதராஜ்(60), காளிமுத்து(45), வெங்கடேஷ்(48) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 40 புள்ளித் தாள்கள் மற்றும் ரூ.250 பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News