உள்ளூர் செய்திகள்
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 619 பேருக்கு கொரோனா
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 212 பேர் குணமடைந்தனர்.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 619 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 2 ஆயிரத்து 406-ஆக உள்ளது.
இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 212 பேர் குணமடைந்தனர்.
இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 98 ஆயிரத்து 487-ஆக உள்ளது. மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 ஆயிரத்து 888 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே நேற்று பலி இல்லை. இதனால் பலி எண்ணிக்கை 1031-ஆக உள்ளது.