உள்ளூர் செய்திகள்
பலியான முதியவர்

மயங்கி விழுந்த முதியவர் சாவு

Published On 2022-01-17 10:04 GMT   |   Update On 2022-01-17 10:04 GMT
சேலத்தில் சுமார் 56 வயது மதிக்கத்தக முதியவர் மயங்கி விழுந்து இறந்தார்.
அன்னதானப்பட்டி:

சேலம் அன்னதானப்பட்டி சிவசக்தி மகால்  திருமண மண்டபம் அருகில் சுமார் 56 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார்.

இதை பார்த்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரங்கள் தெரியவில்லை.

அவரது உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News