உள்ளூர் செய்திகள்
16 கைதிகளுக்கு சின்னம்மை நோய் பாதிப்பு
வேலூர் ஜெயிலில் 16 கைதிகள் சின்னம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர்:
வேலூர் ஜெயிலில் 700-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
நோயால் பாதிக்கப்படும் கைதிகள் மீது உ£¤ய கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அவர்களுக்கு தொடக்க காலத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டால் உயிரை காப்பாற்ற முடியும். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வேலூர் சிறையில் உள்ள 16 கைதிகள் சின்னம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர்.
இதுகுறித்து ஜெயில் அதிகா£¤கள் கூறுகையில்:-
வோ¤சல்லா எனப்படும் வைரஸ் தொற்று மூலமாக பரவக்கூடியது சின்னம்மை எந்த தருணத்தில் வேண்டுமானாலும் ஒருவருக்கு சின்னம்மை பாதிப்பு ஏற்படலாம்.
தற்போது வேலூர் மத்திய சிறையில் 16 கைதிகள் சின்னம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மூலம் சிறையில் உள்ள மற்ற கைதிகளுக்கு பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக 16 கைதிகள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்கள் குணம¬ட்நது வருகின்றனர்.
கைதிகள் குணமடைந்த பிறகு மற்ற கைதிகளுடன் தங்க வைக்கப்படுவர் என்றனர்.