உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

ராணுவ விமானத்தால் பொதுமக்கள் அச்சம்

Published On 2022-01-17 09:26 GMT   |   Update On 2022-01-17 09:26 GMT
அதிக சத்தத்துடன் சுற்றி வந்த ராணுவ விமானத்தில் பொதுமக்கள் அச்சமடைந்தனர்

திருச்சி:

வேலூர்  மாவட்டம் அரக்கோணத்தில்  இருந்து ராணுவ பயிற்சி  விமானங்கள்  புறப்பட்டு ராமேஸ்வரம் வரை சென்று  வருவது வழக்கம்.  இவ்வாறு  வரும் போது அதிக ஒலி எழுப்புவது வாடிக்கை.

 அந்த வகையில் இன்று காலை சுமார் 10 மணியளவில்  ராணுவ விமானம்   திருச்சி மாநகரை கடந்து   சென்றது. இந்த விமானங்கள்   கே.கே.நகர், விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளை கடந்து சென்ற போது அதிக சத்தத்துடன்    சென்றது. இதனால்  அச்சமடைந்த வீட்டில்  இருந்தவர்கள் உடனடியாக  வெளியில் வந்து பார்த்தபோது  ராணுவ விமானங்கள் கடந்து சென்றது தெரியவந்தது. 

இதனால் ஏதேனும் முக்கிய சம்பவம் நடைபெற உள்ளதா என்ற  அச்சத்தில் பொது மக்கள்  கேள்வி எழுப்பி  வந்தனர்.   பின்பு அந்த ராணுவ விமானம் பயிற்சி விமானம் என தெரியவந்தபோது நிம்மதி அடைந்தனர். இதனால் சற்று நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
Tags:    

Similar News