உள்ளூர் செய்திகள்
திருப்பத்தூர் அருகே மஞ்சு விரட்டில் பிளஸ்-1 மாணவர் பலி
திருப்பத்தூர் அருகே நடந்த மஞ்சு விரட்டு போட்டியை பார்த்து கொண்டிருந்த பிளஸ்-1 மாணவர் மாடு முட்டி பலியானார்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சியில் வருடந்தோறும் பாரம்பரிய மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் மஞ்சுவிரட்டு நடந்தது.
கொன்னத்தான்பட்டியை சேர்ந்த பரமசிவம் மகன் பாலாஜி (வயது 16) என்பவர் மஞ்சுவிரட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் புகுந்த மாடு எதிர்பாராதவிதமாக பாலாஜியை முட்டி தூக்கி எறிந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்.
இவர் நெற்குப்பையில் உள்ள சாத்தப்பா அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். மேலும் இந்த மஞ்சுவிரட் டில் சுமார் 16 பேருக்கும் மேல் காயம் ஏற்பட்டது. அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து நெற்குப்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.