உள்ளூர் செய்திகள்
சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் முன்பு விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில

விவசாயிகள் திடீர் சாலை மறியல்

Published On 2022-01-12 07:17 GMT   |   Update On 2022-01-12 07:17 GMT
நெல் விலை குறைக்கப்பட்டதால் சேத்துப்பட்டில் விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சேத்துப்பட்டு:

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வந்தவாசி சாலையில் சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடம் தமிழகத்திலேயே நெல் வரத்து அதிகம் உள்ள 2வது இடம் ஆகும் இங்கு சேத்துப்பட்டு சுற்றியுள்ள கிராமப் பகுதிகள் மற்றும் மாவட்டம் மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் விவசாயிகள் நெல் மணிலா பயிர் வகைகள் மிளகாய் போன்றவற்றை விற்பனைக்காக எடுத்து வந்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று 265 லாட் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொன்னி நெல் எச்.எம்.டி. அம்மன். கோ 51 ஆர்.என்.ஆர். மற்றும் மணிலா பயிர் வகைகளை விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொண்டுவந்து வைத்தனர்.

பின்னர் விலைப்பட்டியல் வெளியிடப்பட்டது இதை பார்த்த விவசாயிகள் இதில் பொன்னி நெல் கடந்த வாரத்தில் விலை சென்றதை விட நேற்று பொன்னி நெல் 100 முதல் சுமார் 700 ரூபாய் வரை குறைவாக விலை சென்றதாககூறி ஆத்திரமடைந்தனர். விவசாயிகள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் முன்பு வந்தவாசி- சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் சாலையில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.

 இதனால் 3 மணி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது இதனால் போளூர் திருவண்ணாமலை வேலூர் செஞ்சி ஆகிய நகரப் பகுதிகளுக்கு செல்லும் கார் வேன் பஸ் லாரி இரு சக்கர வாகனங்கள் உட்பட போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது இது குறித்து தகவலறிந்த சேத்துப்பட்டு தாசில்தார் கோவிந்தராஜ், வந்தவாசி டிஎஸ்பி விஸ்வேஸ்வரய்யா. போளூர் டிஎஸ்பி அறிவழகன்.சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி தேசூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தினேஷ் குமாரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டு பின்னர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து பின்னர் செய்யாறு வருவாய் கோட்டாட்சியர் விஜயராஜ். திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இராஜ காளீஸ்வரன், ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயலாளர் தர்மராஜ் பின்னர் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளைஅழைத்து 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார் பின்னர் அதிகாரிகள் இனி வரும் காலங்களில் இது போன்று நடக்காது. நெல்லை தரம் பார்த்து உரியவிலையை வியாபாரிகள் போடுவார்கள் என்று கூறினார்கள். 

பின்னர் விவசாயிகள் சமரசம் அடைந்து கலைந்து சென்றனர் மூன்று மணி நேரம் சாலை மறியல் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்ததால் நேற்று சேத்துப்பட்டு பகுதி மிகவும் பரபரப்பாக காணப்பட்டது போலீசார் குவிக்கப்பட்டனர்.
Tags:    

Similar News