உள்ளூர் செய்திகள்
பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய லாரி டிரைவர் போக்சோவில் கைது
கோபிசெட்டிபாளையம் அருகே 11-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய லாரி டிரைவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கெட்டிசெவியூரை சேர்ந்தவர் மனோஜ் (வயது 27). லாரி டிரைவர். மனோஜ் பக்கத்து கிராமத்தை சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் அடிக்கடி அந்த மாணவியை சந்தித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியிடம் நெருங்கி பழகி வந்துள்ளார். இதில் அந்த மாணவி கர்ப்பம் அடைந்தார். இது குறித்து மாணவியின் பெற்றோருக்கு தெரிய வர அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் மாணவியின் பெற்றோர்கள் கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் மனோஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் மனோஜ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கெட்டிசெவியூரை சேர்ந்தவர் மனோஜ் (வயது 27). லாரி டிரைவர். மனோஜ் பக்கத்து கிராமத்தை சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் அடிக்கடி அந்த மாணவியை சந்தித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியிடம் நெருங்கி பழகி வந்துள்ளார். இதில் அந்த மாணவி கர்ப்பம் அடைந்தார். இது குறித்து மாணவியின் பெற்றோருக்கு தெரிய வர அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் மாணவியின் பெற்றோர்கள் கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் மனோஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் மனோஜ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.