உள்ளூர் செய்திகள்
விபத்து பலி

டி.என்.பாளையம் அருகே விபத்தில் முதியவர் பலி

Published On 2022-01-10 12:13 GMT   |   Update On 2022-01-10 12:13 GMT
டி.என்.பாளையம் அருகே விபத்தில் முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டி.என்.பாளையம்:

டி.என்.பாளையத்தை அடுத்த கடம்பூர் அருகே உள்ள கரளயம் பகுதியை சேர்ந்தவர்கள் பாட்டப்பன் (வயது61) மற்றும் மணிகண்டன் (30). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் கரளயத்தில் இருந்து இரட்டிப்பாளையம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றனர். மோட்டார் சைக்கிளை மணிகண்டன் ஓட்டினார். அவருக்கு பின்னால் பாட்டப்பன் உட்கார்ந்திருந்தார். கடம்பூரை அடுத்த பவளக்குட்டை பிரிவு அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறியதில், 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பாட்டப்பன் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கடம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Tags:    

Similar News