உள்ளூர் செய்திகள்
பொங்கல் பண்டிகைக்காக கும்பகோணம் கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள்
பொங்கல் பண்டிகையையொட்டி கும்பகோணம் கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் எளிதாக எவ்வித சிரமமும், இடையூறும் இன்றி, பயணம் செய்ய ஏதுவாக சென்னையில் இருந்து
கீழ்கண்ட ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது.
கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை ஆகிய இடங்களுக்கு வரும் 11-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை
சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
இதேபோல் திருச்சியில் இருந்து தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களுக்கு 11-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை, மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் ஊர்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கு இயக்கப்படுகிறது.
கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட
அனைத்து முக்கிய நகரங்களுக்கும் 11-ந் தேதி முதல் 13-ந்தேதி வரை
அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து அனைத்து நகர் பஸ்களும்
பயணிகள் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் இயக்க
விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் 11 முதல் 13-ந்தேதி வரை சென்னையிலிருந்து பொதுமக்கள்
எளிதாக பயணம் செய்யும் வகையில், தற்காலிக
பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், திருவையாறு தட பேருந்துகள், தாம்பரம் சானிடோரியம்
அறிஞர் அண்ணா பஸ் நிலையத்திலிருந்து இயக்கப்படுகிறது.
கரூர், திருச்சி, அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை, அறந்தாங்கி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, மதுரை, கமுதி, முதுகுளத்தூர், நாகப் பட்டினம், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, சீர்காழி, திருவாரூர், திருத்துறைப் பூண்டி, வேதாரண்யம் தட பேருந்துகள்
கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர்.
பஸ் நிலையத்திலிருந்தும் இயக்கப்பட உள்ளது.
மேலும், பொங்கல் முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல வரும்
16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.