உள்ளூர் செய்திகள்
மீன்பிடிக்க சென்ற மீனவர்கள்.

வேதாரண்யம்-மீன்பிடிக்க சென்ற மீனவர்கள்

Published On 2022-01-10 14:55 IST   |   Update On 2022-01-10 14:55:00 IST
வேதாரண்யத்தில் மீன்பிடிக்க மீனவர்கள் மீண்டும் கடலுக்கு சென்றனர்
வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப் பள்ளம், வணவன்மகாதேவி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் முழு ஊரடங்கை முன்னிட்டு 5 ஆயிரத்துக்கும்  மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க 
கடலுக்கு செல்லவில்லை. 

இதனால் ஆயிரக் கணக்கான பைபர் படகுகளை கரையோரம் நிறுத்தி வைத்திருந்தனர். இன்று காலை 6 மணியுடன் முழு ஊரடங்கு முடிவடைந்ததால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். 

இதேபோல் வேதாரண்யத்தில் இருந்து வெளி ஊர்களுக்கு உப்பு ஏற்றி செல்லும் பணிகளும் பாதிப்படைந்தது.  இன்று லாரிகள் மூலம் வெளி ஊர்களுக்கு 
உப்பு லோடு கொண்டு செல்லப்பட்டது.

Similar News