உள்ளூர் செய்திகள்
விஷம் குடித்து கல்லூரி மாணவர் தற்கொலை
பாபநாசத்தில் விஷம் குடித்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்தார்.
பாபநாசம்:
பாபநாசம் அருகே வளத்தாமங்கலம் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் முரசொலிமாறன் (வயது 21). இவர் கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டி.எம்.இ. படித்து வந்தார். இவர் அடிக்கடி
வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
பல்வேறு மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றும் பலன் அளிக்காததால் மனமுடைந்த முரசொலி மாறன் வயலுக்கு வைத்திருந்த விஷம் கலந்த
பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார்.
அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் முரசொலிமாறன் இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்
குமார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.