செங்கல்பட்டு மாவட்டத்தில் எகிறும் கொரோனா பாதிப்பு
செங்கல்பட்டு:
தமிழகத்தில் கொரோனா 3-ம் அலை வேகமாக பரவி வருகிறது. சென்னையில் தினசரி நோய் பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று மட்டும் புதிதாக 1,512 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் நோய் தொற்று பாதிப்பு வெறும் 168 ஆக இருந்தது. கடந்த 9 நாட்களில் கொரோனாவின் பாதிப்பு எகிறி உள்ளது.
நேற்று மட்டும் தாம்பரத்தில்-166 பேர், பல்லாவரம்-540, அனகாபுத்தூர்-57, பம்மல்-68, சிட்ல பாக்கம்-59, மாடம் பாக்கம்-59 பேருக்கு நோய்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிகபட்சமாக தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதியில் கொரோனா பரவல் வேகம் அதிகமாக காணப்படுகிறது. இதையடுத்து இந்த பகுதிகளில் சுகாதார அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகத்தினரும் அதிக கவனம் செலுத்தி நோய்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். கடந்த 7-ந் தேதிக்கு பின்னர் தினசரி பாதிப்பு ஆயிரத்தை கடந்து உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 9 நாட்களில் தினசரி நோய் தொற்று பாதிப்பு விவரம் வருமாறு:-
1-ந்தேதி 168 பேர், 2-ந்தேதி 146 பேர், 3-ந்தேதி 158 பேர், 4-ந்தேதி 290 பேர், 5-ந்தேதி 596 பேர், 6-ந்தேதி 816 பேர், 7-ந்தேதி 1,039 பேர், 8-ந்தேதி 1,332 பேர், 9-ந்தேதி 1512 பேர்.