உள்ளூர் செய்திகள்
கைது

மறைமலைநகர் அருகே மது விற்ற 2 பேர் கைது

Published On 2022-01-10 14:02 IST   |   Update On 2022-01-10 14:02:00 IST
மறைமலைநகர் அருகே மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பஸ் நிறுத்தம் அருகே பொது ஊரடங்கு நாளில் திருட்டுத்தனமாக மது விற்கப்படுவதாக மறைமலை நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் பஸ் நிறுத்தம் அருகே உள்ள முள்புதரில் திருட்டுத்தனமாக மது விற்றுகொண்டிருந்த திருச்சியை சேர்ந்த தினேஷ் (வயது 30) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல மறைமலைநகர் தொழிற்சாலை பிரதான சாலையில் திருட்டுத்தனமாக மது விற்ற ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த ராஜா (35), என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 15 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது சம்பந்தமாக மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News