உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

குடும்ப தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர்

Published On 2022-01-09 13:04 IST   |   Update On 2022-01-09 13:04:00 IST
பவானி அருகே குடும்ப தகராறில் கணவர் மனைவியை அரிவாளால் வெட்டிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சித்தோடு:

பவானி அருகே குடும்ப தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பவானி அருகே உள்ள ஆர். என். புதூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (30). சுமை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி நந்தினி. இவர்களுக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் குழந்தை இல்லை.
 
இந்நிலையில் கணேசன் அடிக்கடி குடித்து விட்டு வந்து நந்தினியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

இதனால், நந்தினி தனது தாய் வீட்டிற்கு சென்று உள்ளார். சம்பவத்தன்று கணேசன் தனது மனைவியிடம் தனக்கு குழந்தை பெற்றுத்தர முடியவில்லை என கூறி அடித்து தகாத வார்த்தைகளால் பேசினார். 

பின்னர் ஆத்திரத்தில் அருகில் இருந்த அரிவாளை எடுத்து வெட்டியுள்ளார்.

அப்போது நந்தினி தடுக்க முயன்ற போது கை மற்றும் தலையின் பின் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் நந்தினி வலியால் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அவரது தந்தை, தம்பி மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர்.

இதனை கண்ட கணேசன் அரிவாளை கீழே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தார். உடனே காயம் அடைந்த நந்தினியை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டர்ர. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இது குறித்து சித்தோடு போலீசில் புகார் அளித்தனர்.  புகாரின் பேரில் போலீசார்  வழக்குப்பதிவு செய்து மனைவியை அரிவாளால் வெட்டிய கணேசனை தேடி வருகின்றனர்.

Similar News