உள்ளூர் செய்திகள்
விவசாயிகள் சாலை மறியல்.

பயிர் நிவாரணம்கோரி சாலை மறியல்

Published On 2022-01-09 07:32 GMT   |   Update On 2022-01-09 07:32 GMT
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் கேட்டு விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்:

நாகை அருகே நடுக்கடை கிராமத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தொடர் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதற்கு ஒன்றிய செயலாளர் தங்கையன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு 
கோஷங்கள் எழுப்பினர்.

அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியலை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்.

இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் 1 மணி நேரம் 
போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News