உள்ளூர் செய்திகள்
ஈரோட்டில் ஒரே நாளில் ரூ.8.38 கோடிக்கு மது விற்பனை
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் இன்று முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் ஈரோட்டில் நேற்று ஒரே நாளில் ரூ.8.38 கோடிக்கு மது விற்பனையானது.
ஈரோடு
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் ஈரோட்டில் நேற்று ஒரே நாளில் ரூ.8.38 கோடிக்கு மது விற்பனையானது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் இன்று முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக இன்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக டாஸ்மாக் கடைகள் இன்று முழுவதுமாக அடைக்கப்பட்டு உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 210 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 93 பார் வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது.
தினமும் ரூ. 4 கோடி வரை மதுபானங்கள் விற்பனை நடைபெறும். ஆனால் பண்டிகை காலங்களில் வழக்கத்தை விட அதிக அளவு விற்பனை ஆகி வருகிறது.
பண்டிகை காலங்களிலும், விடுமுறை நாட்களிலும் முன்னதாகவே மது பிரியர்கள் டாஸ்மாக் கடையில் குவிந்து தங்களுக்கு வேண்டிய மது வகைகளை அள்ளிச் செல்வார்கள். இதனால் விசேஷ காலங்களில் டாஸ்மாக் விற்பனை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும்.
இந்நிலையில் இன்று முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் நேற்று டாஸ்மாக் கடைகளில் குடிமகன்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
குறிப்பாக மாலையில் இருந்து இரவு வரை அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் குடிமகன்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களுக்கு வேண்டிய மதுபாட்டில்களை அள்ளிச் சென்றனர்.
குறிப்பாக ரம், விஸ்கி, பிராந்தி, பீர் வகைகளை குடிமகன்கள் இன்றைக்கும் சேர்த்து அதிக அளவில் அள்ளி சென்றனர். இதனால் வழக்கத்தை விட விற்பனை அமோகமாக இருந்தது.
அனைத்து டாஸ்மாக் கடையிலும் வழக்கத்தை விட மது வகைகள் கூடுதலாக கையிருப்பில் வைக்கப்பட்டிருந்தது. இரவில் டாஸ்மாக் கடை மூடும் வரை விற்பனை விறுவிறுப்பாக இருந்தது.
இன்று முழுஊரடங்கு என்பதால் ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் ரூ.8 கோடியே 38 லட்சத்துக்கு டாஸ்மார்க் விற்பனை ஆனதாக மாவட்ட டாஸ்மாக் பொது மேலாளர் தெரிவித்தார். இது சாதாரண நாட்களை விட கூடுதலாக ரூ.3 கோடி அதிகமாகும்.