உள்ளூர் செய்திகள்
தற்கொலை

ஊரப்பாக்கத்தில் அச்சக ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2022-01-08 16:09 IST   |   Update On 2022-01-08 16:09:00 IST
ஊரப்பாக்கத்தில் அச்சக ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ராஜீவ்காந்தி நகர் லட்சுமி அம்மாள் தெருவை சேர்ந்தவர் பெருமாள் (வயது 47). இவர் தாம்பரத்தில் உள்ள தனியார் அச்சகத்தில் வேலை செய்து வந்தார்.

இவர் உடல்வலியால் பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பெருமாள் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெருமாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News