உள்ளூர் செய்திகள்
ஈரோடு காளைமாடு சிலை அருகில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

ஈரோட்டில் இன்று 518 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

Published On 2022-01-08 10:11 GMT   |   Update On 2022-01-08 10:11 GMT
ஈரோட்டில் இன்று 518மையங்களில் கொரோனா தடுப்பூசிமுகாம் நடந்தது. ஏராளமானோர் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
ஈரோடு:

ஈரோட்டில் இன்று 518மையங்களில் கொரோனா தடுப்பூசிமுகாம் நடந்தது. ஏராளமானோர் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை விரிவுபடுத்தும் வகையில் மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி இதுவரை 17 கட்டமாக மாபெரும் தடுப்பூசிமுகாம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான மக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். 
 
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 2 தவணைத் தடுப்பூசியும் சேர்த்து மொத்தம் 27 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து இன்று 18-வது கட்டமாக மாபெரும் தடுப்பூசி முகாம் தொடங்கியது. 

ஈரோடு மாவட்டத்தில் 518 மையங்களில் இன்று காலை 9 மணிக்கு  1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு முகாம் தொடங்கப்பட்டது.

மாநகர பகுதியில் 50 இடங்களிலும் நடமாடும் வாகனங்கள் மூலமும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றுவருகிறது. இந்த பணியில் மாவட்டம் முழுவதும் 2072 பணியா ளர்களும், 66 வாகனங்களும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் தடுப்பூசிமுகாம் நடைபெற்று வருகிறது. 

இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள், 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் இந்த முகாமினை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.


Tags:    

Similar News