உள்ளூர் செய்திகள்
வெறிச்சோடிக்கிடக்கும் தபால் நிலையம்.

இணைய தள சேவை பாதிப்பால் முடங்கிய தபால் நிலையம்

Published On 2022-01-08 09:59 GMT   |   Update On 2022-01-08 09:59 GMT
சிவகங்கையில் இணைய தள சேவை பாதிக்கப்பட்டதால் தபால் நிலைய பணிகள் முடங்கின. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
சிவகங்கை

சிவகங்கையில் செயல்பட்டு வரும் தலைமை தபால் நிலையத்தில் இணைய சேவை பாதிப்பால் பணிகள் முழுவதுமாக பாதிக்கப்பட்டு முடங்கியது. இதனால் அங்கு வரும் வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

மாவட்டத்தின் தலைநகரான சிவகங்கையில் ஆட்சியர் அலுவலகம், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட ஒருங்கினைந்த நீதிமன்றம், 38 துறை சார்ந்த தலைமை அலுவலகம் என பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டுவருகிறது. 

இந்த அலுவலகங்கள் அனைத்திற்கும் அரசு சார்பில் அனுப்பபடும் முக்கிய தபால்கள் அனைத்தும் சிவகங்கை போஸ் சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் மூலமாகவே அனுப்பப்படுகிறது. மேலும் இந்த தபால் நிலையத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளும் கையா ளப்படுகிறது. 

முதியோர் உதவி தொகை, விதவை உதவி தொகை என பல்வேறு பண பரிமாற்றங்களும் நடைபெற்று வருகிறது. தற்சமயம் முழுவதுமாக கணினி மயமாக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ஒரு வார காலமாகவே இந்த தபால் நிலையத்தில் இணைய சேவை பாதிப்பால் எந்த ஒரு பணிகளும் நடைபெறாமல் முடங்கியுள்ளது. மேலும் பணம் அனுப்ப வரும் வாடிக்கையாளர்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். 

மேலும் தபால்களை கையாள்வதிலும் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் தினசரி 5 ஆயிரத்திற்கும் மேலான மக்கள் வந்துசெல்லும் இந்த தபால்நிலையம் தற்சமயம் வாடிக்கையாளர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்ப1டுகிறது. 

வரக்கூடிய ஒன்றிரண்டு வாடிக்கையாளர்களும் இணைய சேவை துண்டிப் பால் திரும்ப செல்கின்றனர். எனவே இணைய சேவையை சரி செய்து மீண்டும் இயங்க செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News