உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

வீட்டின் பூட்டை உடைத்து நகை- வெள்ளி கொலுசு திருட்டு

Published On 2022-01-07 15:46 IST   |   Update On 2022-01-07 15:46:00 IST
பெருந்துறை அருகே பூட்டிய வீட்டை உடைத்து நகை மற்றும் வெள்ளி கொலுசை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெருந்துறை:

பெருந்துறை அருகே பூட்டிய வீட்டை உடைத்து  நகை மற்றும் வெள்ளி கொலுசை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெருந்துறை அடுத்த  விஜயமங்கலம் பகலாயூர் பகுதியை சேர்ந்தவர் யோகநாதன் (வயது 41).  இவர் சொந்தமாக டிராக்டர் வைத்து ஓட்டி வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு யோகநாதன் தனது மனைவி மற்றும் குழந்தைகளை அவினாசியில் உள்ள தனது மாமனார் வீட்டில் விட்டு விட்டு டிராக்டர் ஓட்டுவதற்காக வெளியூர் சென்று விட்டார்.

இந்த நிலையில் யோகநாதன் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார். அப்போது அவரின் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. 

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோ திறந்து கிடந்தது.   இது குறித்து யோகநாதன் தனது மனைவிக்கு போன்  மூலம் தகவல் கொடுத்தார். அவர் வீட்டுக்கு வந்து பார்த்தார்.

அப்போது பீரோவில் வைத்திருந்த 5 பவுன் ஆரம், 5 பவுன் செயின், அரை பவுன் தோடு, 11 பவுன் தங்க காசுகள் என மொத்தம் 21 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி கொலுசுகள் காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

இதை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது  தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ. 2 லட்சத்து 31 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

இது குறித்து பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News