உள்ளூர் செய்திகள்
வேதாரண்யத்தில் பாம்பு கடித்து பெண் பரிதாபமாக இறந்தார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா, ஆயக்காரன்புலம் ஒன்றாம்சேத்தி முதலியார் குத்தகை பகுதியை சேர்ந்தவர் வீரசேகரன். இவருடைய மகள் பிரதீபா
(வயது 20). நர்சிங் படித்துவிட்டு திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் கடையில் வேலைபார்த்து வந்தார்.
நேற்று இரவு வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பாம்பு பிரதீபாவை கடித்தது.
இதில் மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேதாரண்யம்
அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரதீபா இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கன்னிகா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.