உள்ளூர் செய்திகள்
கொலை செய்யப்பட்ட கவுதமி

ரூ.3 லட்சம் பணத்துக்காக மனைவியை எரித்து கொன்று நாடகமாடிய கணவர்

Published On 2022-01-07 06:56 GMT   |   Update On 2022-01-07 06:56 GMT
மனைவியை கணவரை கொலை செய்து நாடகமாடிய சம்பவம் கஸ்தம்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அடுத்த கஸ்தம்பாடியை சேர்ந்தவர் ராஜா (வயது 32) ஆட்டோ டிரைவர். இவரது மனைவி கவுதமி (28) இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

ராஜா வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாகவும், மது குடிக்க பணம் கேட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுபற்றி அறிந்த கவுதமியின் தாய் தனது மகள் கஷ்டப்படக்கூடாது என்று வெளிநாட்டில் வேலை பார்த்ததில் கிடைத்த ரூ.3 லட்சத்தை கவுதமிக்கு அனுப்பியுள்ளார்.

இதுபற்றி தெரியவந்ததும் ராஜா ரூ.3 லட்சத்தையும் தன்னிடமே தர வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார். அதற்கு கவுதமி மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே நேற்றுமுன்தினம் தகராறு ஏற்பட்டது. அதன் பின்னர் வெளியில் சென்ற கவுதமி வீடு திரும்பவில்லை. அவர் குடும்ப தகராறு காரணமாக மாயமாகி விட்டதாக கணவர் ராஜா தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து நேற்று மாயமான கவுதமி கரும்புத் தோட்டத்தில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். எரிந்த நிலையில் கிடந்த கவுதமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இது தொடர்பாக ராஜாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மனைவியை ராஜா அடித்து கொலை செய்து கரும்பு தோட்டத்தில் வைத்து எரித்தது தெரியவந்தது.

ராஜா வாக்குமூலத்தில் மனைவியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டதால் அவரை போலீசார் கைது செய்தனர்.

மனைவியை கணவரை கொலை செய்து நாடகமாடிய சம்பவம் கஸ்தம்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News