உள்ளூர் செய்திகள்
கைது

ரெயில்வே பெண் போலீசை பலாத்காரம் செய்ய முயற்சி- சேலம் டி.எஸ்.பி.யின் ஜீப் டிரைவர் கைது

Published On 2022-01-04 10:03 IST   |   Update On 2022-01-04 10:03:00 IST
ஈரோட்டில் ரெயில்வே பெண் போலீசை பலாத்காரம் செய்ய முன்றது தொடர்பாக சேலம் டி.எஸ்.பி.யின் ஜீப் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு:

ஈரோடு பழைய ரெயில்வே நிலையம் பகுதியை சேர்ந்தவர் செல்வன் (வயது 32). இவர் சேலம் ரூரல் டி.எஸ்.பி. ஜீப் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஈரோடு ரெயில்வேயில் பெண் போலீசாக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் அதே குடியிருப்பு பகுதியில் கணவரை பிரிந்து தனியாக வசித்து வரும் 29 வயதான பெண் ஒருவர் ரெயில்வே போலீசில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு குழந்தை இல்லை.

பெண் போலீசிடம் செல்வன் நட்பாக பழகி வந்தார். சம்பவத்தன்று செல்வன் அந்த பெண் போலீஸ் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் போலீஸ் கூச்சலிட்டவாறு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினரிடம் நடந்த சம்பவத்தை கூறினார்.

இதுகுறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் விஜயா சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.

வீட்டுக்குள் அத்துமீறி நுழைதல், கொலை மிரட்டல் விடுத்தல், தவறாக நடக்க முயற்சி செய்தல், பெண் வன்கொடுமை தடைச்சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் செல்வன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

பின்னர் செல்வன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

Similar News