உள்ளூர் செய்திகள்
அருணாசலேஸ்வரர் கோவில்

அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சிகிச்சை மையம் திறப்பு

Published On 2022-01-03 15:45 IST   |   Update On 2022-01-03 15:45:00 IST
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்காக சிகிச்சை மையம் திறக்கப்பட்டது.
திருவண்ணாமலை:-

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அவர்களுக்கு கோவில் வளாகத்திலேயே சிகிச்சை அளிக்கும் வகையில் புதிதாக சிகிச்சை மையம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. 

காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவ மையத்தை தொடங்கி வைத்தார். 

இதையொட்டி திருவண்ணாமலை கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ மைய திறப்பு விழா நிகழ்ச்சியில் சட்டமன்ற துணை சபாநாயகர் பிச்சாண்டி, கலெக்டர் முருகேஷ், அண்ணாதுரை எம்.பி,மு.பெ.கிரி எம்.எல்.ஏ., டாக்டர் எ.வ.வே.கம்பன், முன்னாள் நகராட்சி தலைவர் ஸ்ரீதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் முருகேஷ் பேசும்போது, பக்தர்களின் நலன்கருதி அமைக்கப்பட்ட மருத்துவ மைய திட்டத்துக்கு வரவேற்பு தெரிவித்து முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். சிகிச்சை மையத்தில் 2 டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள்  நியமிக்கப்பட்டுள்ளனர்.

Similar News