உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

மின் இணைப்புக்கு விண்ணப்பித்துள்ள விவசாயிகளுக்கான சிறப்பு முகாம் - நாளை மறுநாள் நடக்கிறது

Published On 2022-01-03 06:14 GMT   |   Update On 2022-01-03 06:14 GMT
பல்லடம், தாராபுரம், காங்கயம் பகுதி விவசாயிகள் பலர் மின் இணைப்பு பெற வேண்டி விண்ணப்பித்துள்ளனர்.
பல்லடம்:

விவசாய மின் இணைப்புக்கு விண்ணப்பித்துள்ள விவசாயிகள் சிறப்பு முகாமில் பங்கேற்று திருத்தம் மேற்கொள்ள பல்லடம் மின் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து பல்லடம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சுப்பிரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பல்லடம், தாராபுரம், காங்கயம் பகுதி விவசாயிகள் பலர் மின் இணைப்பு பெற வேண்டி விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் சர்வே எண் உள்ளிட்டவற்றில் ஏதேனும் மாற்றம் செய்ய விரும்பும் விவசாயிகளுக்காக சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. 

வருகிற 5-ந்தேதி அன்று காலை 10மணி முதல் மாலை 5 மணி வரை கோட்ட அளவில் நடக்கும். பெயர் மற்றும் சர்வே எண் மாற்றம் செய்ய, வி.ஏ.ஓ., மூலம் கிணறு, குறிப்பிட்டுள்ள வரைபடம், உரிமை சான்று, பத்திரப்பதிவு நகல், வாரிசு, இறப்பு சான்று மற்றும் கூட்டு உரிமையாளர்களாக இருந்தால் அவர்களது ஆட்சேபனை இன்மை கடிதம் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு பல்லடம் - 94458 51217, காங்கயம் - 94458 52010, தாராபுரம் - 94458 51562 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News