உள்ளூர் செய்திகள்
கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடிய போலீசார்
ஈரோடு மாவட்டத்தில் புத்தாண்டு பாதுகாப்பு பணிக்காக மாவட்டம் முழுவதும் 800-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். மாநகரில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடினர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் புத்தாண்டு பாதுகாப்பு பணிக்காக மாவட்டம் முழுவதும் 800-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். மாநகரில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடினர்.
ஈரோடு காளைமாடு சிலை, பன்னீர்செல்வம் பார்க், பஸ் நிலையம், ஸ்வஸ்திக் கார்னர் ரெயில் நிலையம், ஜி.எச். ரவுண்டானா போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
குறிப்பாக ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் புத்தாண்டையொட்டி ஏராளமானோர் திரண்டு புத்தாண்டை வரவேற்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சிலர் மது குடித்து விட்டு வாகனம் ஓட்டி வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதேபோல் வேகமாக வாகனங்களை இயக்கியவர்கள், விதிமுறைகளை மீறி வாகனங்களை இயக்கியவர்கள் என 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு போலீசார் அறிவுரை கூறி அவர்களுடன் புத்தாண்டையொட்டி கேக் வெட்டி கொண்டாடி அனுப்பி வைத்தனர்.