இளையான்குடி அருகே மின்சாரம் தாக்கி கொத்தனார் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளையான்குடி அருகே உள்ள இந்திரா நகர் பகுதியை சேர்ந்த ஹனிபா மகன் ரவி என்ற ரபீக் ராஜா (வயது22). இவர் கொத்தனார் மற்றும் கட்டிட பணிகளுக்கான அனைத்து பணிகளையும் செய்து வந்தார். கண்மாய் கரை பகுதியில் சென்ற மின்சார கம்பி மீது சாய்ந்த நிலையில் இறந்துகிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த இளையான்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து ரபீக்ராஜா உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.