உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

விவசாய மின் இணைப்பு பெறும் வழிமுறைகள் - திருப்பூர் மேற்பார்வை பொறியாளர் அறிவிப்பு

Published On 2021-12-22 09:26 GMT   |   Update On 2021-12-22 09:26 GMT
விவசாய மின் இணைப்பு பெறும் வகையில் தட்கல் 2021-22 திட்டமும் நடைமுறையில் உள்ளது.
திருப்பூர்:

விவசாய மின் இணைப்பு பெறும் வழிமுறைகள் குறித்து திருப்பூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ஸ்டாலின் பாபு அறிவித்துள்ளார். 

இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

திருப்பூர் மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட திருப்பூர், அவினாசி பகுதி விவசாயிகள் கடந்த 1-4-2006 முதல் 31-3-2013 வரை சாதாரண வரிசையில் விவசாய மின் இணைப்பு வேண்டி விண்ணப்பம் பதிவு செய்தவர்கள் அந்தந்த பகுதி செயற்பொறியாளரை தொடர்பு கொண்டு 30 நாள் அறிவிப்பு கடிதம் பெற்று தேவையான ஆவணங்களை சமர்பித்து மின் இணைப்பு பெற்றுக் கொள்ளலாம்.

1-4-2013 முதல் 31-3-2014 வரை விவசாய விண்ணப்பம் பதிவு செய்து ரூ.10 ஆயிரம் சுயநிதி திட்டத்தில் மின் இணைப்பு பெறுவதற்கு ரூ.500 முன் மதிப்பீட்டுத் தொகை செலுத்தியுள்ள விண்ணப்பதாரர்கள் மின் இணைப்பு பெற்றுக்கொள்ளலாம். 

1-4-2014 முதல் 31-3-2018 வரை விவசாய மின் இணைப்பு விண்ணப்பம் பதிவு செய்து ரூ.25 ஆயிரம் அல்லது ரூ.50 ஆயிரம் சுயநிதி திட்டத்தில் மின் இணைப்பு பெறுவதற்கு ரூ.500 முன் மதிப்பீட்டுத் தொகை செலுத்தியுள்ள விண்ணப்பதாரர்கள் மின் இணைப்பு பெற்றுக்கொள்ளலாம்.

மேற்கண்ட ஆண்டுகளில் பதிவு செய்தவர்களுக்கு தனித்தனியாக அறிவிப்பு கடிதம் வழங்கப்படும். தட்கல் திட்டம் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விவசாய மின் இணைப்பு பெறும் வகையில் தட்கல் 2021-22 திட்டமும் நடைமுறையில் உள்ளது. 

5 குதிரைத்திறன் வரை மின் இணைப்புக்கு ரூ.24 லட்சம், 5 முதல் 7.5 குதிரைத்திறன் வரை ரூ.2 லட்சம், 7.5 முதல் 10 குதிரைத்திறன் வரை ரூ.3 லட்சம், 10 குதிரைத்திறனுக்கு மேல் ரூ.4 லட்சம் வரைவோலையை செயற்பொறியாளரிடம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் சமீபத்திய தேதியில் கிராம நிர்வாக அதிகாரியிடம் இருந்து பெறப்பட்ட உரிமைசான்று, மின் இணைப்பு கோரும் கிணற்றின் இருப்பிடத்தை குறிக்கும் வரைபடம் போன்ற ஆவணங்களுடன் செயற்பொறியாளரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News