உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி அருகே சூதாடிய 14 பேர் கைது
கிருஷ்ணகிரி அருகே சூதாடிய 14 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை போலீசார் அவனதாப்பட்டி சிறுவர் பூங்கா பகுதியில் ரோந்து சென்ற போது பணம் வைத்து சூதாடிய சங்கர் (வயது 27), மகேந்திரன் (38) ஆகிய 2 பேரை கைது செய்தனர். கெலமங்கலம் போலீசார் ரோந்து சென்ற போது பணம் வைத்து சூதாடிய ராஜாமணி (33), பிரகாஷ்குமார் (49), ரங்கநாதன் (38), மஞ்சுநாத் (23), சந்திரசேகர் (32), குப்புராஜ் (58) ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரத்து 700 பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல கெலமங்கலம் போலீசார் ரோந்து சென்ற போது பணம் வைத்து சூதாடிய வெங்கடேஷ் (24), சந்திரப்பா (36), மணி (31), சதீஷ் (23), முருகேஷ் (45), அபிமனு (42) ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5 ஆயிரத்து 200 பறிமுதல்செய்யப்பட்டது.