உள்ளூர் செய்திகள்
பல்லடம் நகராட்சி

அமைப்புசாரா நல வாரியத்தில் பதிவு செய்ய சிறப்பு முகாம்- பல்லடத்தில் 3 நாட்கள் நடக்கிறது

Published On 2021-12-19 09:02 GMT   |   Update On 2021-12-19 09:02 GMT
வருமான வரி செலுத்துபவராக இருக்கக்கூடாது. பி.எப்., இ.எஸ்.ஐ. பயனாளர் ஆக இருக்கக்கூடாது.
பல்லடம்:

பல்லடம் நகராட்சியில் அமைப்பு சாரா தொழிலாளர்களின் இலவச பதிவு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து பல்லடம் நகராட்சி ஆணையாளர் விநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

 பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் வருகிற 21, 22, 23  ஆகிய நாட்களில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இலவச பதிவு முகாம் நடைபெற உள்ளது. அது சமயம் சிறு, குறு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள், நெசவு தொழிலாளர்கள், சவரத் தொழிலாளர்கள், செய்தித்தாள் விநியோகிப்பார்கள் உள்பட தொழிலாளர்கள் அனைவரும் அமைப்புசாரா நல வாரியத்தில் பதிவு செய்துகொள்ளலாம். இதற்கான தகுதிகள் 16 வயதிலிருந்து 59 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வருமான வரி செலுத்துபவராக இருக்கக்கூடாது. பி.எப்., இ.எஸ்.ஐ. பயனாளர் ஆக இருக்கக்கூடாது. அமைப்பு சாரா தொழிலாளியாக மட்டுமே இருக்க வேண்டும். பதிவு செய்வதற்கு ஆதார் அட்டை ,வங்கி கணக்கு புத்தகம் ,படிப்பு சான்றிதழ் உள்ளிட்டவைகளை கொண்டு வரவேண்டும்.

எனவே இந்த வாய்ப்பை  பயன்படுத்தி இதுவரை அமைப்புசாரா நல வாரியத்தில் பதிவு செய்யாத தொழிலாளர்கள் இந்த முகாமை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News