உள்ளூர் செய்திகள்
விபத்து

மோட்டார் சைக்கிள் மோதி தனியார் கல்லூரி ஊழியர் பலி

Published On 2021-12-15 15:58 IST   |   Update On 2021-12-15 15:58:00 IST
கவுந்தபாடி அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் படுகாயமடைந்த தனியார் கல்லூரி ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கவுந்தப்பாடி:

கவுந்தப்பாடி அருகே உள்ள சலங்க பாளையம் டேம் வீதியை சேர்ந்தவர் செங்கோட்டையன் (70). இவர் விராலிமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் ஊழியராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். ஓய்வுபெற்ற பிறகும் தொடர்ந்து கல்லூரிக்கு சென்று வருகிறார்.

கல்லூரிக்கு செல்வதற்காக தனது மொபட்டில் கவுந்தப்பாடி நால்ரோடு வழியாக ஈரோடு செல்லும் ரோட்டில் சென்று சாலையை கடக்க முயன்றார். அப்போது கவுந்தப்பாடியை நோக்கி அய்யம்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் (21) என்பவர் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி வந்து மொபட் மீதுமோதினார்.

இதில் செங்கோட்டையன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனே அவரை மீட்டு ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செங்கோட்டையன் இறந்தார்.
இச்சம்பவம் குறித்து அவரது மகன் ராம்குமார் கொடுத்த புகாரின் பேரில் கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்.

Similar News